அகநானூறு - 53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
5 |
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் |
10 |
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், 'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்; |
15 |
'அருளே காதலர்' என்றி, நீயே. |
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 53. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க