அகநானூறு - 51. பாலை
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக்
கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி |
5 |
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, |
10 |
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் சேயிழை தௌர்ப்பக் கவைஇ, நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப, நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே. |
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 51. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க