அகநானூறு - 39. பாலை
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
5 |
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
10 |
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
15 |
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, 'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின் ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் |
20 |
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் ஏற்று ஏக்கற்ற உலமரல் போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
25 |
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 39. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நின், நிற், கண்டு, பட்டென, படர்ந்து, எட்டுத்தொகை, சங்க, வாய்