அகநானூறு - 38. குறிஞ்சி
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
5 |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி, நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
10 |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
15 |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் கூஉம் கணஃது எம் ஊர்' என ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 38. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, தோழி, சொல்லியதூஉம், தலைமகன், சங்க, எட்டுத்தொகை