அகநானூறு - 377. பாலை
கோடை நீடலின், வாடு புலத்து உக்க சிறு புல் உணவு, நெறி பட மறுகி, நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர் பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, |
5 |
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து, நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய, வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று, பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் |
10 |
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச் சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி, வம்பலர் ஆகியும் கழிப மன்ற நசை தர வந்தோர் இரந்தவை இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! |
15 |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 377. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நலம், பெரு, சங்க, எட்டுத்தொகை, சிறு