அகநானூறு - 360. நெய்தல்
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
5 |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து உரு உடன் இயைந்த தோற்றம் போல, அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, வந்த மாலை பெயரின், மற்று இவள் பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
10 |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
15 |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை அன்றில் சேக்கும் முன்றில், பொன் என நல் மலர் நறு வீ தாஅம் புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 360. நெய்தல் , நெய்தல், இலக்கியங்கள், அகநானூறு, வந்த, பகற்குறி, கால், பொழில், சங்க, எட்டுத்தொகை, உடன்