அகநானூறு - 357. பாலை
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
5 |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
10 |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் காலொடு துயல்வந்தன்ன, நின் |
15 |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 357. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நின், தீம், சங்க, எட்டுத்தொகை, பெருங்