அகநானூறு - 355. பாலை
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
5 |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் செழு மனை மறக்கும் செவ்வி வேனில் தானே வந்தன்றுஆயின், ஆனாது இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
10 |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! 'யாமே எமியம் ஆக, நீயே பொன் நயந்து அருள் இலையாகி, இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 355. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க