அகநானூறு - 352. குறிஞ்சி
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
5 |
முழவன் போல அகப்படத் தழீஇ, இன் துணைப் பயிரும் குன்ற நாடன் குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
10 |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
15 |
புதுவது புனைந்த திறத்தினும், வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 352. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, தோழிக்குத், தலைமகள், நிறுத்த, பின்றை, எட்டுத்தொகை, சங்க