அகநானூறு - 35 . பாலை
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த |
5 |
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் |
10 |
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, |
15 |
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 35 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, அணிந்து, எட்டுத்தொகை, சங்க