அகநானூறு - 345. பாலை
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
5 |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
10 |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த |
15 |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம், |
20 |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 345. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, கால், நாள், சிறு, செம், கருங், எட்டுத்தொகை, சங்க