அகநானூறு - 342. குறிஞ்சி
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
5 |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், ஏவல் இளையர் தலைவன், மேவார் அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
10 |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் வரையரமகளிரின் அரியள், அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 342. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, கொள், எட்டுத்தொகை, சங்க