அகநானூறு - 335. பாலை
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் யானும் அறிவென்மன்னே; யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
5 |
இன்னா வேனில் இன் துணை ஆர, முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் அரிய அல்லமன், நமக்கே விரி தார் ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
10 |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
15 |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய, முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
20 |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 335. பாலை , இலக்கியங்கள், பாலை, அன்ன, அகநானூறு, பொருள், சங்க, எட்டுத்தொகை