அகநானூறு - 331. பாலை
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் |
5 |
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் |
10 |
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், வேளிரொடு பொரீஇய, கழித்த வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! |
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 331. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க