அகநானூறு - 32. குறிஞ்சி
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
5 |
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, 'சூரரமகளிரின் நின்ற நீ மற்று யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச் சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
10 |
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் கடிய கூறி, கை பிணி விடாஅ, வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
15 |
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, என் குறைப் புறனிலை முயலும் |
20 |
அண்கணாளனை நகுகம், யாமே. |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 32. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, குறை, தோழி, சங்க, எட்டுத்தொகை, நின்ற