அகநானூறு - 319. பாலை
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
5 |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
10 |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், 'செல்வேம்' என்னும் நும் எதிர், |
15 |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 319. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, செலவு, என்னும், சங்க, எட்டுத்தொகை