அகநானூறு - 301. பாலை
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி, படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி! நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு, |
5 |
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து, ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை, சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி, பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர, |
10 |
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ, முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக் களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை, வண்ண மார்பின் வன முலைத் துயல்வர, |
15 |
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக் குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப, கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து, சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு |
20 |
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென, தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர், இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன் தலை மன்றம் காணின், வழி நாள், அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்; |
|
அதுவே மருவினம், மாலை; அதனால், காதலர் செய்த காதல் நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே? |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 301. பாலை, இலக்கியங்கள், அகநானூறு, பாலை, பூங், சில், சங்க, எட்டுத்தொகை, சிறு