அகநானூறு - 295. பாலை
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
5 |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் கல்லுடை அதர கானம் நீந்தி, கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
10 |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
15 |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
20 |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 295. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, அகல், கானம், சங்க, எட்டுத்தொகை, நீர்