அகநானூறு - 285. பாலை
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
5 |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
10 |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் குவளை உண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே, காதலர்; வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
15 |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 285. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க