அகநானூறு - 283. பாலை
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
5 |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமை, கரி மரம் கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
10 |
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
15 |
இனிய ஆகுக தணிந்தே இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 283. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நெடுங், எட்டுத்தொகை, சங்க