அகநானூறு - 281. பாலை
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை |
5 |
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, |
10 |
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து, அவரோ சென்றனர் பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 281. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, இயல், எட்டுத்தொகை, சங்க