அகநானூறு - 274. முல்லை
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் பருவம் செய்த பானாட் கங்குல், ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, |
5 |
திண் கால் உறியன், பானையன், அதளன், நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன், மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப, தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ, |
10 |
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும் தண் நறு புறவினதுவே நறு மலர் முல்லை சான்ற கற்பின் மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே. |
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக் காடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 274. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, கால், எட்டுத்தொகை, சங்க