அகநானூறு - 250. நெய்தல்
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
5 |
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
10 |
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, இறை வளை நெகிழ்ந்த நம்மொடு துறையும் துஞ்சாது, கங்குலானே! |
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 250. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், குறை, தோழி, சங்க, எட்டுத்தொகை