அகநானூறு - 26. மருதம்
முள்ளிக் குவிகுலைக் கழன்ற, |
5 |
பெருங் கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி, மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி, 'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று |
10 |
இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ, திதலை அணிந்த தேம் கொள் மென் முலை நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம் வேண்டினமே; |
15 |
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக் கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச் செவிலி கை என் புதல்வனை நோக்கி, 'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என் |
20 |
மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு, 'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய், சிறு புறம் கவையினனாக, உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய் மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே |
25 |
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே? |
தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 26. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, அணிந்த, தலைமகன், வாயில், தாம், கேழ், எட்டுத்தொகை, சங்க, செய், முயங்கல்