அகநானூறு - 247. பாலை
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
5 |
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் அரிய கானம் என்னார், பகை பட முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
10 |
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 247. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, வேறுபட்ட, கிளை, சங்க, எட்டுத்தொகை