அகநானூறு - 244. முல்லை
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முது மரம் புலம்பப் போகி, முகை வாய் திறந்த நகை வாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
5 |
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு இனிதுகொல், வாழி தோழி?'' என, தன் பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் |
10 |
பாணன் வந்தனன், தூதே; நீயும் புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, நெடுந் தேர் ஊர்மதி, வலவ! முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 244. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வாய், எட்டுத்தொகை, சங்க