அகநானூறு - 238. குறிஞ்சி
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, மட மான் வல்சி தரீஇய, நடு நாள், இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
5 |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
10 |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
15 |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 238. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, முகை, தடக், சங்க, எட்டுத்தொகை, ஆமான்