அகநானூறு - 23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, காடே கம்மென்றன்றே; அவல, |
5 |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், பதவின் பாவை, முனைஇ, மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; அனையகொல் வாழி, தோழி! மனைய |
10 |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் மௌவல், மாச் சினை காட்டி, அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 23. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க