அகநானூறு - 229. பாலை
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
5 |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
10 |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி நல் மா மேனி தொலைதல் நோக்கி, இனையல் என்றி; தோழி! சினைய |
15 |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார், |
20 |
'இன்னே வருதும்' எனத் தௌத்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 229. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நீர், செய், சங்க, எட்டுத்தொகை