அகநானூறு - 219. பாலை
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், 'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
5 |
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, 'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, |
10 |
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் 'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் பொரி அரை விளவின் புன் புற விளை புழல், அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
15 |
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, மடத் தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என, நோவல் யான |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 219. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, வால், எட்டுத்தொகை, சங்க