அகநானூறு - 214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
5 |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; அமரும் நம் வயினதுவே; நமர் என நம் அறிவு தௌந்த பொம்மல் ஓதி யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
10 |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தௌ மணி ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, ஆர் உயிர் அணங்கும் தௌ இசை மாரி மாலையும் தமியள் கேட்டே? |
15 |
பாசறைக்கண் தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 214. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, கதிர், எட்டுத்தொகை, சங்க