அகநானூறு - 212. குறிஞ்சி
தா இல் நல் பொன் தைஇய பாவை விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
5 |
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
10 |
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
15 |
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
20 |
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது எளியள் அல்லோட் கருதி, விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 212. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க