அகநானூறு - 199. பாலை
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
5 |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
10 |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
15 |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
20 |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 199. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, போல், ஒழிய, சங்க, எட்டுத்தொகை, நிரை