அகநானூறு - 198. குறிஞ்சி
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
5 |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் இள மழை சூழ்ந்த மட மயில் போல, வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
10 |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், ஆன்ற கற்பின் சான்ற பெரியள், அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
15 |
ஏர் மலர் நிறை சுனை உறையும் சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 198. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, மலர், யாமத்து, சங்க, எட்டுத்தொகை