அகநானூறு - 187. பாலை
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
5 |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
10 |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
15 |
வேனில் வெற்பின் கானம் காய, முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, பனை வெளிறு அருந்து பைங் கண் யானை ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
20 |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் வைகு கடல் அம்பியின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே? |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 187. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நாள், அன்ன, தோழி, முனை, நாட்டு, எட்டுத்தொகை, சங்க