அகநானூறு - 185. பாலை
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய, பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து, இரும்பின் இன் உயிர் உடையோர் போல, வலித்து வல்லினர், காதலர்; வாடல் |
5 |
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர் கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய, பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில், |
10 |
பெரு விழா விளக்கம் போல, பல உடன் இலை இல மலர்ந்த இலவமொடு நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 185. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க