அகநானூறு - 183. பாலை
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் திதலை அல்குல் அவ் வரி வாடவும், அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று |
5 |
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, காலை வந்தன்றால் காரே மாலைக் |
10 |
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
15 |
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 183. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க