அகநானூறு - 182. குறிஞ்சி
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து, வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ, தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி, ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட, |
5 |
வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர, முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட! அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து உரவு மழை பொழிந்த பானாட் கங்குல், |
10 |
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும், பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால், கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ, உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க |
15 |
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் பெரு வரை நண்ணிய சாரலானே. |
தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 182. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, பகல், எட்டுத்தொகை, சங்க