அகநானூறு - 170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது; தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
5 |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, பறைஇ தளரும் துறைவனை, நீயே, சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
10 |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, 'நின் உறு விழுமம் களைந்தோள் தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 170. நெய்தல் , நெய்தல், இலக்கியங்கள், அகநானூறு, விழுமம், நின், சங்க, எட்டுத்தொகை