அகநானூறு - 168. குறிஞ்சி
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
5 |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
10 |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் வாள் வரி வயப் புலி கல் முழை உரற, கானவர் மடிந்த கங்குல்; மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 168. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, இரவுக்குறி, எட்டுத்தொகை, சங்க