அகநானூறு - 165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
5 |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் 'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
10 |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, 'தருமணற் கிடந்த பாவை என் அருமகளே என முயங்கினள் அழுமே! |
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 165. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க