அகநானூறு - 153. பாலை
நோகோ யானே; நோதகும் உள்ளம்; அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, வெம்பும்மன், அளியள்தானே இனியே, வன்கணாளன் மார்புஉற வளைஇ, |
5 |
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண் உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு, உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின், பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் |
10 |
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல் வல்லுநள்கொல்லோ தானே எல்லி ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனொடு பொலிந்த வானின் தோன்றி, |
15 |
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் கை விடு சுடரின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே? |
மகட் போக்கிய செவிலித்தாய் சொற்றது. - சேரமான் இளங்குட்டுவன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 153. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க