அகநானூறு - 145. பாலை
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், வற்றல் மரத்த பொற் தலை ஓதி வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
5 |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு வாள்வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார, உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் 'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
10 |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
15 |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
20 |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 145. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நின்ற, எட்டுத்தொகை, சங்க