அகநானூறு - 136. மருதம்
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தௌ ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
5 |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
10 |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
15 |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், 'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
20 |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
25 |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 136. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, பேணி, பரூஉப், சங்க, எட்டுத்தொகை, வெண்