அகநானூறு - 117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
5 |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், பொலந்தொடி தௌர்ப்ப வீசி; சேவடிச் சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
10 |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், தன் ஓரன்ன தகை வெங் காதலன் வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
15 |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 117. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, கால், வெண், ஆங்கண், குரல், எட்டுத்தொகை, சங்க