அகநானூறு - 112. குறிஞ்சி
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி சிதலை செய்த செந் நிலைப் புற்றின் மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
5 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
10 |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
15 |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, நொதுமல் விருந்தினம் போல, இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 112. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க