அகநானூறு - 107. பாலை
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
5 |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
10 |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
15 |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் மாலை இன் துணைஆகி, காலைப் பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
20 |
மண மனை கமழும் கானம் துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 107. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க