அகநானூறு - 106. மருதம்
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை |
5 |
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது செய்யாம்ஆயினும், உய்யாமையின், செறிதொடி தௌர்ப்ப வீசி, சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி! ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
10 |
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும் களிறு பெறு வல்சிப் பாணன் எறியும் தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே. |
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 106. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, அகைந்தன்ன, எட்டுத்தொகை, சங்க