ஐங்குறுநூறு - 8. புனலாட்டுப் பத்து
சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து நின்வெங் காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே அலரே மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. | 1 |
வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத் திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் குவளை உண்கன் ஏஎர் மெல்லியல் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே. | 72 |
வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் கள்நறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே. | 73 |
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக் கரைசேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே. | 74 |
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் அலர்தொடங் கின்றால் ஊரே மலர தொன்னிலை மருதத்துப் பெருந்துறை நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே. | 75 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 8. புனலாட்டுப் பத்து, இலக்கியங்கள், பத்து, புனலாட்டுப், ஐங்குறுநூறு, பண்ணை, றிசினே, குவளை, ஒல்லுமோ, சங்க, எட்டுத்தொகை, மகிழ்ந