ஐங்குறுநூறு - 49. தேர் வியங்கொண்ட பத்து
சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் சேயிழை மாதரை உள்ளி நோய்விட முள் இட்டு ஊர்மதி வலவநின் புன்இயல் கலிமாப் பூண்ட தேரே. | 481 |
தெரியிழை அரிவைக்குப் பெருவிருந் தாக வல்விரைத்து கடவுமதி பாகவெள்வேல் வென்றடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே. | 482 |
ஆறுவனப்பு எய்த அலர்தா யினவே வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே முன்னுறக் கடவுமதி பாக நன்னுதல் அரிவை தன்னலம் பெறவே. | 483 |
வேனில் நீங்கக் கார்மழை தலைஇக் காடுகவின் கொண்டன்று பொழுது பாடுசிறந்து கடியக் கடவுமதி பாக நெடிய நீடினம் நேரிழை மறந்தே. | 484 |
அரும்படர் அவலம் அவளும் தீரப் பெருந்தோள் நலம்வர யாமும் முயங்க ஏமதி வலவ தேரே மாருண்டு உகளும் மலரணிப் புறவே. | 485 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 49. தேர் வியங்கொண்ட பத்து, இலக்கியங்கள், கடவுமதி, தேர், ஐங்குறுநூறு, வியங்கொண்ட, பத்து, தேரே, எட்டுத்தொகை, சங்க